Tuesday, April 27, 2010

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் ஹிந்து தர்மத்தையும் இந்தியர்களையும் காப்பாற்றியவர் அவர் இல்லாவிடில் நம் மதம் மறைந்து போயிருக்கலாம் இந்திய நாட்டிற்க்கு விடுதலையும் கிடைக்காமல் போயிருக்கலாம்.அதனால் பரிபூரணமாக அவருக்கு நாம் கடமை பட்டுளோம்.அவருடைய திடம், நம்பிக்கை, வீரம், ஞானம் ஆகியவை நம்மை என்றும் ஊக்குவிக்கட்டும்

- ராஜகோபலச்சரி

மனிதர்கள் மனிதர்களே மாற்றங்களுக்கு தேவை படுகிறார்கள்.

மற்றவைகள் எல்லாம் தயாராக இருகின்றன, அனால் வலிமையான சக்தி வாய்ந்த , நம்பிக்கையுள்ள இளைஞர்களே தேவைபடுகின்றனர்.அப்படிப்பட்ட நூறு இளைஞர்களால்,இந்த உலகத்தில் புரச்சியை உருவாக்க முடியும்
- சுவாமி விவேகானந்தர்

Sunday, April 25, 2010


சுவாமி விவேகனாந்தர் அழைக்கிறார்
எனது வீரக் குழந்தைகளே நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள் .குட்டி நாய்கிளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை.ஆகாயத்தின் இடியோசையைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டாம் .எழுந்து நின்று வேலை செய்யுங்கள்.

என் மகனே!உறுதியாக நில்.பிறருடைய உதவியை எதிர்பாராதே.மனிதர்களின் உதவியைவிட ஆண்டவனுடைய உதவி எவ்வளவோ பெரிதல்லவா?தூயவனாக இரு.இறைவனை நம்பு.அவரை நம்பியுள்ளவரை நீ நேர்வழியில் செல்கிறாய்.உன்னை எதுவும் நிற்க முடியாது.

உண்மையில் நீங்கள் என் குழந்தைகள் ஆனால் எதற்கும் ஆஞ்சமாட்டீர்கள் .எதைக் கண்டும் தயங்கி நிற்கமாட்டீர்கள்.சிங்கக் குட்டிகளை போல இருப்பீர்கள்.இந்தியாவை மட்டுமின்றி,உலகம் முழுவதையும் நாம் எழுப்பியாக வேண்டும் .